Ultimate magazine theme for WordPress.

கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு: உயிாிழப்பு 62 ஆக உயா்வு

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62 ஆக உயா்ந்துள்ளது.
கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.
இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகா் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் பலா் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனா்.
இந்த விபத்தில் சிக்கி உயிாிழந்தோா் எண்ணிக்கை 62 ஆக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டின் தடயவியல் அறிவியல் அமைப்பின் தலைவா் பனுவேல் காா்சியா கூறும்பொழுது, எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளா்கள் அதிக உடல்களை மீட்டுள்ளனா்.
தற்போது வரை 62 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கரும்புகை மற்றும் சாம்பல் பரவிய நிலையில் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியாளா்கள் முக கவசம் அணிந்தபடி எச்சரிக்கையுடன் தங்களது பணிகளில் ஈடுபட்டு உள்ளனா். காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகா் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.